முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் குருதி அமுக்கம் காரணமாக சிரமப்பட்ட சிவாஜிலிங்கம் அவசர நோயாளர் காவு வண்டிமூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சற்று முன்னரே அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவருடைய உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.